அன்புடன் நான்..
மனிதனின் கற்பனா சக்தி அசாதரணமானது. அவனின் கற்பனைகளில் உதித்த பல படைப்புகளை நாம் இன்றும் ரசித்தும் அனுபவித்தும் வருகிறோம். கற்பனைக்குப் பஞ்சமில்லா காலங்களில் உருவான புராண இதிகாசங்கள் அதற்குச் சிறந்த சான்றுகள். மனிதன் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தான். ஓரிடத்திலிருந்து கொண்டே வேறோர் இடத்தில் நிகழும் சம்பவங்களைக் கண்கூடாக ரசிக்கக்கூடியவனாக இருந்தான் என்கின்றன இதிகாசங்கள். ஆனால் நடப்பு வாழ்க்கையில், அவை அதிசியக்கவைக்கும் ஆற்றல்கள் அன்று. ஒருவேளை அவை நிகழ்ந்தவையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும், ஒருவரின் கற்பனையில் உதித்தவையே அவ்வாற்றல்கள். ஆக, கற்பனையைப் பேழையில் பூட்டிவைப்பதை விட, கடைவிரிப்பதே சாலச் சிறந்தது. அதன் வழி உருவானதே “பேனா பேப்பர்”. வெறும் கற்பனையை மட்டும் காட்டாமல், என் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கவும், தமிழ்த் தாகத்தைத் தணிக்கவும் ஒரு தளம் தேவைப்பட்டது. அது உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என தோன்றியது. காகிதங்களிலும், சுவர்களிலும் கிறுக்கிய காலங்கள் உண்டு. அவை காணாமல் போனதும் உண்டு. எழுத்தின் ஊடே என் கற்பனைகளையும், உணர்வுகளையும், தமிழ்த் தாகத்தையும் பரவச் செய்ய எனக்குத் தேவைப