மழை நின்ற பின்பும் தூறல்
திரைபடங்களில் காணாத மிக அழகான காட்சிகள் சில சமயம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும். இருளுக்கு மத்தியில் ஒளி வீசிக் கொண்டிருந்த முழுமதியும், இசையை நிறைவு செய்த நிசப்தமும்.. மனசுக்குப் பிடித்த ஒருவர் மிக அருகிலும், கைகளில் இரு கப் கோஃபியும், கண்களில் நிறைந்தோடிய காதலும், இதைவிட அழகான காட்சி இதுவரை கற்பனையிலும் கண்டதில்லை என்றிருந்தது.. காதல் .. உடல் எனும் தூரிகையின் வழி, உணர்வுகள் எனும் வர்ணங்களால் ஆன மிக அழகான ஓவியம். உணர்வுகள் நிலை மாறினால் அந்த ஓவியம் அலங்கோலமாகிறது. சரிபடுத்த முடியாத நிலையில் விழுகிறது.. காதலும் காவியம்தான், தொடக்கமும், நிறைவும் இருக்குமாயின். அந்த நிறைவு கூடலாக இருந்தால் சுபம். அதுவே ஊடலில் முடிந்தால் வலி மட்டுமே எஞ்சியிருக்கும். ஆனால் அந்த வலி கூட அன்று சுகமானதாக இருந்தது.. நிசப்தத்தை மீறி இளையராஜாவின் பாடல் மனத்துக்குள் மெதுவாக இசைத்துக் கொண்டிருந்தது.. "கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே, கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே.." " என் கல்யாணத்துக்கு வந்திரு".. அவள் குரல் நிசப்தத்தை உடைத்தது.. "ஆங்.. சரி".. அவள் கண்ணை நேராக பார்