மலேசியத் தமிழ்
வெறும் தொடர்பு கருவியாக இருந்து, உணர்வுகளோடு கலந்து, ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பதுதான் மொழி. மனிதன் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள எழுப்பிய ஒலிகள் சொற்களாக மருவி, அந்த சொற்கள் பல பரிமாணங்களைக் கண்டு, ஒரு மொழிக்குள் அடைக்களம் காண்கின்றன. என்னத்தான் மனிதன் மொழிகளை வகைப்படுத்தினாலும், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மொழிகள் மாற்றம் காண்கின்றன.சொல் உச்சரிப்பு மாறுபடுகின்றது. ஒரு சில சொற்கள் காலத்தால் மறைந்திருக்கின்றன. ஒரு சில சொற்கள் இடத்திற்கும், காலத்திற்கும் உச்சரிக்கும் நாவிற்கும் ஏற்றாற்போல் மாற்றம் கண்டிருக்கின்றன. வேற்று மொழி படையெடுப்பால், ஒரு சில சொற்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் காலத்தோடு அழிந்தும் போயிருக்கின்றன. இப்படி பல தாக்கங்களைக் கடந்து இன்னும் உயிர்த்திருக்கும் செம்மொழிகள் சிலவே. அதில் ஒன்று தமிழ் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், ஆதியில் பேசப்பட்ட எழுதப்பட்ட தமிழும், இப்போது பேசுகின்ற எழுதப்படுகின்ற தமிழும் ஒன்றா என்று கேட்டால். நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகின்றன. அதற்கு நம் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. இது எல்லா மொழிகளிலும் காணப்படுகின்ற