சைலைப்புத்ரி (தொடர்:பாகம் 2)
அந்த அலறலைக் கேட்டு என் கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.கண்களை இருக்கமாக மூடிக் கொண்டேன். எடுடா ஓட்டத்தைன்னு ஓட காலைத் தூக்கினேன். அதற்குள் யாரோ என்னை நகர முடியாத அளவிற்கு இருக்கமாக பிடித்துக்கொண்டார்கள். இனிக்கு அவ்ளோதான் என் கதைன்னு நினைத்தேன். உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்து போய் கிடந்திருந்தது. ஒரு ஐந்து நிமிடம் கண்களைத் திறக்காமல் "முருகா முருகா" என மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படி சொன்னால் அமுக்கிற பேய் விட்டு விடும்னு எங்கம்மா சொல்லிருக்காங்க. ஆனா என்னை பிடித்துக் கொண்டிருந்த அந்த ஆள் என்னை விடுவதாக தெரியவில்லை. சரி யார்தான் என்று பார்த்து விடுவோம்னு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களைத் திறந்தேன். பார்த்தால், என்னை அழைத்து வந்த பெண்தான் என்னை இருக்கமாக கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள். அவள் என்னவோ காதலில் என்னை கட்டிக் கொள்ளவில்லை. பயந்து போய்தான் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் உடல் வியர்த்துப் போயிருந்தது. மூச்சுச் சத்தத்தை அவள் அடக்கி வைத்திருந்தாலும், அவளில் இதயத்தில் இருந்து, "லப் டப் லப் டப்" ஓசை கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அதுவும