Posts

Showing posts from October, 2020

யாருங்க இந்த சரஸ்?

Image
அர்த்தமுள்ள இந்து மதம்னு சொல்றோம் ஆனா எத்தனை பேர் அர்த்தம் புரிஞ்சு நடந்துக்குறோம். ஆனா எல்லாத்துக்கும் அர்த்தம் தெரிஞ்சக்கறதும் கஷ்டம்தான். ஒரு ஆயுட்காலம் பத்தாது. அவ்ளோ இருக்கு! இந்துங்குற பேருக்கு பின்னாடியே பெரிய வரலாறு இருக்குங்க. சரி, அத அப்புறம் பாக்கலாம். இப்போ டைட்டல்க்கு வருவோம். யார் இந்த சரஸ்வதி??  இந்து மதம் என்றழைக்கபடுற நம்பிக்கையில் சரஸ்வதி முக்கிய கடவுளர்களின் ஒருவர். உலகத்தில் உள்ள எல்லா தொழில்களையும் மூன்றாக வகைப்படுத்தி படைத்தல், காத்தல், அழித்தல்னு சொல்லி, அதற்கு மூன்று கடவுள்களையும் நியமித்திருக்கிறோம். ப்ரம்மா, விஷ்ணு, சிவன்னு. இந்த முத்தொழிலும் செய்ய இவர்களுக்குத் தேவையான சக்திகள் முறையே, ஞானம், செல்வம், வீரம்ன்னு சொல்லி, சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதின்னு அவர்களுக்குத் துணைவியர்களாகவும் கூறுகிறோம். படைப்புத் தொழில் செய்றவருக்கு ஞானம் அவசியம். அதானாலதான் பிரம்மாவுக்கு ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி மனைவியா இருக்குறாங்க! பிரம்மா சரஸ்வதி கலை, கல்வி என அறிவு சார்ந்த அனைத்துக்கும் தெய்வமாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி என்ற சொல், சரஸ் வதி என்ற இரு சமஸ்கிருத் சொற்களின

குத்துவிளக்கு குத்தறவிளக்கா?

Image
ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். குத்து விளக்குக்கு ஏன் குத்து விளக்குன்னு பேரு வந்துச்சுன்னு. சிலரிடம் கேட்டா, குத்த வைக்கிறதால குத்து விளக்குங்குறாங்க. சிலர்  ஆன்மீக ரீதியில்,  குத்து என்றால் அழுத்து. அப்படி அழுத்தி, நமகுள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறதுன்னு அர்த்தம்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இது ரெண்டிலயும் உடன் பாடு இல்லைங்க. அதுக்காக பெரிய அளவுல ஆராய்ச்சியெல்லாம் செஞ்டு தீர்வு ஏதோ சொல்லப் போறேன்னு நெனைக்காதீங்க. ஏதோ என் அறிவுக்கு எட்டன்ன வரை அலசி ஆராய்ஞ்சு சில விஷயங்கள சொல்றேன். அப்புறம் நீங்களே முடிவு பண்ணீக்கோங்க.  குத்து விளக்குத் தென்னிந்தியப் பகுதியில் சுபக்காரியத்துக்கோ, துக்கக்காரியத்துக்கோ, தவறாமல் பயன்படுத்துற பாரம்பரிய விளக்கு. குறிப்பா தமிழ் நாட்டிலும் கேரளத்திலும். குத்து விளக்கைப் போலவே இருக்குற விளக்குகள் அயல் நாடுகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. பயன் படுத்தவும் படுகின்றன. அதற்காக தமிழன் தான் ஒட்டு மொத்த நில விலக்குகளுக்கும் சொந்தகாரன்னுச் சொல்லல. ஆனால் தொடர்ப்பிருக்கலாம்.  பைசாந்தியப் பேரரசுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நிலவிளக்கு யாசீதியர்கள் தாய்லாந்தில் கிடைக்கப்பட

முகமூடி முக்கியம் பிகிலு!

Image
இனிக்க இனிக்க பேசும் திறமை இல்லாதவனே நேர்மையானவன். இவன் கோபக்காரன், சண்டைக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என பெயரிடப்படுகிறான். ஆனால் இவனோ மயிரே போனாலும் மடுவை நகர்த்தியாக வேண்டும் என துடியாய் துடிக்கிறான். பைத்தியக்காரன். ஆனாவுனா நான் வெளிப்படையாக இருக்கிறேன் நேர்மையாக இருக்கிறேன் என மார்த்தட்டிக் கொள்கிறான் அசட்டுத்தனமாக. பாவம்..இவன் இருப்பது பொய்மையும் முள்ளமாரிதானமும் நிறைந்த உலகம் என்பது அவனுக்குத் தெரியவில்லை போலும்.. இந்த உலகம் காலத்திற்கு ஏற்றாற்போல்தான் இயங்குகிறது. இவன்தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருக்கிறான். கோபமும் தாபமும் இருந்தாலும், ஆளைப் பார்த்தால் முப்பத்திரண்டு பல்லும் தெரிவது போல் சிரித்தாக வேண்டும். நெய் உருகி வழிவதுப்போல வார்த்தைகளை உருக்கி வழியவைக்கணும். அடடா இவன் அல்லவா உன்னதமானவன், பாசத்தின் உச்சம் என நம்ப வைக்கணும். அதற்கு பல யுக்திகளும் உண்டு. ஆனால் அதெல்லாம் ஒன்னுக்கும் உதவாத நேர்மையைக் கட்டிக் கொண்டும் அழுவும் இவனுக்கு தெரியாது.  போக விட்டு புறணிப் பேசலாம். பேசும் போது வார்த்தைகளுக்குக் கட்டுப்பாடு இல்லை. விட்டா வார்த்தைகளாலே குத்தி கொலை செய்யலாம். மதிக