யாருங்க இந்த சரஸ்?
அர்த்தமுள்ள இந்து மதம்னு சொல்றோம் ஆனா எத்தனை பேர் அர்த்தம் புரிஞ்சு நடந்துக்குறோம். ஆனா எல்லாத்துக்கும் அர்த்தம் தெரிஞ்சக்கறதும் கஷ்டம்தான். ஒரு ஆயுட்காலம் பத்தாது. அவ்ளோ இருக்கு! இந்துங்குற பேருக்கு பின்னாடியே பெரிய வரலாறு இருக்குங்க. சரி, அத அப்புறம் பாக்கலாம். இப்போ டைட்டல்க்கு வருவோம். யார் இந்த சரஸ்வதி?? இந்து மதம் என்றழைக்கபடுற நம்பிக்கையில் சரஸ்வதி முக்கிய கடவுளர்களின் ஒருவர். உலகத்தில் உள்ள எல்லா தொழில்களையும் மூன்றாக வகைப்படுத்தி படைத்தல், காத்தல், அழித்தல்னு சொல்லி, அதற்கு மூன்று கடவுள்களையும் நியமித்திருக்கிறோம். ப்ரம்மா, விஷ்ணு, சிவன்னு. இந்த முத்தொழிலும் செய்ய இவர்களுக்குத் தேவையான சக்திகள் முறையே, ஞானம், செல்வம், வீரம்ன்னு சொல்லி, சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதின்னு அவர்களுக்குத் துணைவியர்களாகவும் கூறுகிறோம். படைப்புத் தொழில் செய்றவருக்கு ஞானம் அவசியம். அதானாலதான் பிரம்மாவுக்கு ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி மனைவியா இருக்குறாங்க! பிரம்மா சரஸ்வதி கலை, கல்வி என அறிவு சார்ந்த அனைத்துக்கும் தெய்வமாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி என்ற சொல், சரஸ் வதி என்ற இரு சமஸ்கிருத் சொற்களின