கணேஷாகிய நான்..
உறவுகளுக்கு மத்தியில் அன்யோன்யம் இருக்குதோ இல்லையோ, புரிந்துணர்வு நிச்சயமா இருக்கணும். அது இல்லாம போனதாலதான் எனக்கும் யாஷுவுக்கும் இவ்ளோ பிரச்னை. யாஷுகிட்ட பக்குவமா பேசனுங்கிற எண்ணம் எனக்கும் வரல, என்கிட்ட சொல்ற தைரியம் அதுக்கும் வரல. ஒரு வேள, எப்பயும் எரிஞ்சு விழுற இவன்கிட்ட என்னென்னு சொல்றதுன்னு நெனச்சிருச்சோ என்னவோ. யாஷுவின் பரிதவிப்ப பார்த்து நானாவது கொஞ்சம் அனுசரணையோடு நடந்திருக்கலாம். இல்ல அதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாம். கல்யாணம் மட்டுமே குறியா இருந்த எனக்கு அதோட பிரச்னை என்னன்னு கேக்க தோனல. அதுக்காக யாஷு மேல எனக்கு அன்பில்லன்னு ஆகாது. அது மேலே நான் உயிரையே வச்சிருக்கேன். ஆனா ரெண்டு பேரு சேர்ந்து வாழ இந்த காதல் மட்டும் போதாது. ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு வச்சிருக்கணும். விட்டுக் கொடுக்க தெரிஞ்சிருக்கணும். யாஷுவோட மாமா மேலே எனக்கு காண்டு இருந்துச்சுதான். யாஷு அவருக்கூட பழகறத பாக்காறப்போ பத்திக்கிட்டு எரியும். ஆனா அத நான் யாஷுகிட்ட காட்டிருக்கக் கூடாது. ஓவேர் பொசெசிவ்ன்னு சொல்வாங்கல்ல. அதுதான். நமக்கானவ நம்மக்கூடதான் இருக்கணும்னு நெனைக்கிறது தப்பில்ல. நம்மக