இலக்கணம் மாறுமா?
“ராஜி எழுந்துருங்க..மணி ஆறாகுது. அலாரம் அடிச்சுக் கிட்டே இருக்கு, அத கொஞ்சம் அடைங்களேன்” சமையல் கட்டிலிருந்து சத்தம் போட்டான் கணவன் வினோத்.. முகம் வரை மூடிக் கொண்டிருந்த போர்வையை எரிச்சலோடு விலக்கிவிட்டு, சோம்பல் முறித்தாள் ராஜி. “அய்யய்யய்யே, நொய் நொய்ன்னுக்கிட்டேதான் இருப்பியா நீ? சமையல் வேலைய பாரு!” படுக்கையறையிலிருந்தே கூச்சலிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ராஜி. எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் வினோத் தன் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தான். அதற்குள் இன்னோர் அலாரம் அடித்தது. அது அவனுடைய கைப்பேசி. “பவானி, பரி! எழுந்துருங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு!” என கூவிக் கொண்டே பிள்ளைகளின் படுக்கையறைக்குள் சென்றான். படுக்கையின் மேல் நெளிந்துக் கொண்டிருந்த தனது இரு பிள்ளைகளையும் தட்டி எழுப்பி “ஹே பசங்களா சீக்கிரம் எழுந்திருங்க! மணியாகுதல்ல.” என பிள்ளைகளை குளியலறைக்குள் அனுப்பும் போதே குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டு சமயலறைக்குள் குடுகுடுவென ஓடினான் வினோத். “டிங்டோங்” இப்போது, கார்லிங் பெல் சத்தம்.. “மணி ஏழாச்சா, பேப்பர்காரி வந்திருப்பா” என மனசுக்குள்ளே பேசிக் கொண்டே வாசல் கதவைத் திறந்து