வந்த மல, போனா டோட்!
நான் சாக போறேன். எனக்குன்னு இங்க யாருமே இல்ல. நான் ஆசைப்பட்டது எதுவுமே நடந்தது இல்ல. என் வாழ்க்கை இன்னிக்கு மாறும், நாளைக்கு மாறும், நாளாநளைக்கு மாறும்னு காத்து காத்து எனக்கு வெறுத்துப் போச்சு. எல்லாமே வேஸ்ட். என்னென்னு கேட்க எந்த நாதியும் இல்ல. மூனு நாளா அழுறேன். என் கண்ணீரைத் துடைக்க ஒருவரும் இல்ல. இனி எதுக்கு நான் வாழணும். அதேதான் நானும் கேட்கிறேன் எதுக்கு நீங்க வாழணும். உங்களோட ஆசைக்காகவும், உங்களோட லட்சியத்துக்காகவும் மட்டும்தான் நீங்க வாழணும்னா, ஸோரி டு சே நீங்க ஒரு சுயநலவாதி! அட ஆமாங்க. இந்த உலகம்தான் உங்களை தனிமைப்படுத்துது. உங்கள சுத்தி இருக்கறவங்கதான் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கறாங்க. எல்லாமே சரி. ஆனா நீங்க என்ன பண்ணீங்க?. தனிமப்படுத்துற உலகத்துக்காக, உங்களுக்காக ஏங்கிகிட்டு இருக்குற உலகத்தை புறக்கணிக்கிறீங்க. மனம் விட்டு பேச நினைக்கிறவங்கள விட்டுட்டு, மன அழுத்தம் கொடுக்கறவங்களதான் தாங்கி பிடிக்கிறீங்க. ஒன்னு மட்டும் புரிங்சுக்கோங்க, நீங்க நெனைக்கிற மாதிரி நீங்க தனிமையில இல்ல. நீங்கதான் உங்களை தனிமைப்படுத்திக்கிறீங்க. இப்படி தப்பெல்லாம் உங்க பக்கம் வெச்சுட்ட