பாலியில் தனியே பயணம்- பாகம் 1
தனியே ஒரு நெடுதூரப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் தோன்றியது. பாலிக்குப் போக வேண்டும் என்பது என் மனதில் பல நாளாக இருந்த ஆசை. சரி பாலிக்கே போகலாம் என்று முடிவெடுத்தேன். பாலி என்றால் கடவுளர் தீவுன்னுச் சொல்லுவாங்க. உண்மையில் அது கடவுளின் தீவுதான். எங்கு பார்த்தாலும் கோயில்களும், கடவுளின் விக்ரகங்களும்தான் தென்பட்டன. பாலிக்குப் போக முடிவெடுத்த மறுகணமே, டிக்கெட் புக் பண்ணிட்டு, அங்கு என்ன என்ன இடங்கள் இருக்கின்றன, போக்குவரத்து வசதிகள் எப்படி, எங்கு தங்கினால் சௌகரியம், எப்படியெல்லாம் ஜாக்கிரடையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு அலசு அலசிவிட்டேன். முதல் நாள் பாலியில் காலடி எடுத்து வைக்கும் போது அங்கு இரவாகிவிட்டது. ஏர்ப்போட்டை விட்டு வெளியேறும் போதே, டெக்சி காரர்களும், கோஜேக்கும் என்ன சுற்றி வலைத்து விட்டனர். கொஞ்ச நேரத்தில் நான் மூச்சுத் தெணறி போனேன். என்னைக் கட்டாயப்படுத்தி அவர்கள் டெக்சியில் வர சொன்னார்கள். என்ன ஆனாலும், அவர்கள் கார்களில் ஏறக்கூடாது என முடிவெடுத்து வேகமாக மேய்ன் ரோட்டுக்கு நடந்தேன். எல்லாம் ஒரு வகையான பயம்தான். மேய்ன் ரோட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு டெக்சி அங்கிள் வந்தாரு, ப