இரட்டை வால் குருவி
அதே நம்பிக்கையில தான் சேகர நான் காதலிச்சேன். ஃபேஸ் புக் நட்பெல்லாம் சரி வராதுன்னு யார் யாரோ சொல்லியும், நான் கேக்கல, ஆனா எவ்ளோ ஏமாளியா இருந்துருக்கோம்னு நெனைக்கறப்போ செம்ம காண்டாகுது. காதல் கண்ண மறைக்கும்னு சொல்றாங்கல, அது அத்துனையும் நெஜம். கண்ண மறைக்கும், காத அடைக்கும், எல்லாமே செய்யும், ஆனா அறிவு மட்டும் இருக்காது.
ஃபோலோ பண்ணி ரெண்டு நாள்லே, ஃபோன் நம்பர் கேட்டான். ஆளும் பாக்க நல்லாதான் இருப்பான். அதனால யோசிக்காம கொடுத்துட்டேன். அப்புறம் அக்கறையா பேச ஆரம்பிச்சான். யாரும் இல்லாம, அன்புக்கு ஏங்குற மாதிரி என் கிட்ட பேசுனான். நானும், அய்யோ பாவம்னு ஆறுதலா இருந்தேன். ஆறுதலோட நிப்பாட்டிருக்கணும். அத விட்டுட்டு காதலிக்க ஆரம்பிச்சேன். யாரு எவரு, என்ன பண்றான், ம் ம் ம் எத பத்தியும் யோசிக்கல, கேக்கல. கல்யாணம் வரைக்கும் பேசி மொத்த நம்பிக்கையும் சம்பாதிச்சான். சரி இவனதான் கல்யாணம் பண்ண போறும்னு பாத்தா.. ஒரு குண்டா தூக்கி போட்டான் பாருங்க..
"பேபி, உன் கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்.".. ஆ சொல்லுங்க.. "பேபி, கோச்சிக்காதே, எனக்கு ஏற்கென்வே கல்யாணம் ஆச்சு. பட் பேபி, நாங்க ஒன்னா இல்ல. பிரிஞ்சுதான் இருகறோம், டிவோஸ் கெடச்சதுக்கப்பறோம், நாம் கல்யாணம் பண்ணிக்கலாம். ஸோரி பேபி.. ன்னா..
"பேபி, நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லணும். எனக்கும் ஏற்கெனவே கல்யாணம் ஆச்சு. ஹஸ்பண்ட் ஜெயில்ல இருக்காரு..."
"பேபி என்ன சொல்ற?? ஏன் என்ன ஆச்சு?
"ஓன்னும் இல்ல பேபி, இப்படிதான் ஒருத்தன் ஏற்கெனவெ கல்யாணம் பண்ணிட்டு என் கிட்ட கடல போட்டுக் கிட்டு இருந்தான். அவருக்கு தெரிஞ்சு போச்சு. அவனோட பொண்டாட்டியும், அவரும் சேர்ந்து அவன போட்டு தள்ளிட்டாங்க.."
அவன் கிட்டேருந்து சவுண்டே வரல..
"பேபி..பேபி.. நீ ஒன்னும் கவலப் படாதே அவரு அடுத்த மாசம்தான் வராரு.. அதுவரைக்கும் நாம ஜாலியா பேசலாம். ஒகேவா பேபி?"
ஃபோன வச்சிட்டான்.. திரும்ப கால் பண்ணா..
" நீங்கள் டாய்ல் செய்த எண் தற்போது சேவையில் இல்லை"...
அவன் அடுத்த சேவைக்கு ரெடியாயிட்டான்னு மட்டும் தெரியுது.. அவன சொல்லி ஒன்னும் இல்ல. அறிமுகம் இல்லாத ஒருவரை தீரவிசாரிக்காமல் காதலிச்சது என் தப்பு.. அவர் யார்? அவரின் குடும்ப பின்னணி என்ன? எங்கு வசிக்கிறார்? என்ன வேலை செய்யுறாருன்னு முதல கேட்டுத் தெரிஞ்ச்சிருந்திருக்கணும். கண்மூடித்தனமான காதல் கண்ண மறைச்சிருச்சு.
இங்க பாருங்க.. உலகம் டிஜிடல் மயமாயிருச்சு. இந்த ஏப் அந்த ஏப்ன்னு என்னன்னமோ வந்திருச்சு. காலத்துக்கு ஏத்த மாதிரி வாழனும்தான் அது புறவாழ்க்கை. அகவாழ்க்கை என்பது பண்பாடோடு இருப்பதுதான் அழகு. தொலை தொடர்பு கருவிகள் தொழில் நுட்பங்கள், தொலைவில் இருப்பவரை உடனுக்குடன் தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பறிமாறிக் கொள்ளவும்தான். அருகில் இருப்பவரை தூரத்தில் வைக்க அல்ல. அவசியத்துக்கு அந்த வசதிகளைப் பயன் படுத்துவது தப்பில்லை. அனாவசியமாக பயன்படுத்துவதுதான் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
காதலியுங்கள், தீரவிசாரித்து காதலியுங்கள். ஒழுக்கமானவரா, பொறுப்பானவரா, நேர்மையானவரான்னு தெரிஞ்சுகிட்டு காதலியுங்கள். சோசியல் மீடியாவில் காதலித்து கல்யாணம் பண்ணி நல்லா வாழ்றவங்க யாருமே இல்லன்னு சொல்லல... இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்..
ஆக்கம்..
ஸ்ரீ குமரன் முனுசாமி
Comments
Post a Comment