நான் கனவு காணல்ல..

எல்லோரும் பொதுவாவே சின்ன வயசுல்ல டாக்டராகணும், டீச்சராகணும்னும் சொல்லவாங்க. ஆனால் அதெல்லாம் தானா வந்த கனவா? இல்லைவே இல்லைங்க. யாரோ வேறொருவர் நமக்குள் விதைச்சது. நாம அதெல்லாம் நம்ளோட சொந்த கனவாவே நினைச்சுக்குவோம்.இப்படிதான் பள்ளியில்ல ஒருமுறை என் டீச்சர் என்னைக் கேட்டாங்க “குமரா, உன்னோட எதிர்கால ஆசை என்ன?” டீச்சர் எனக்கு, டாக்டர் ஆகணும், டீச்சர் ஆகணும், போலீஸ் ஆகணும்னு சொன்னேன். “இவ்வளவும் உன் ஆசையா?” டீச்சருக்கு ஒரே நக்கல். இல்ல டீச்சர், நான் டாக்டர் ஆகணுங்கிறது என் பாட்டியோட ஆசை, நான் டீச்சர் ஆகணுங்கிறது என் அம்மாவோட ஆசை, நான் போலீஸ் ஆகணுங்கிறது என அப்பாவோட ஆசைன்னு சொன்னேன். உடனே டீச்சர் கெக்கபுக்கன்னு சிரிச்சாங்க. அப்போ அவங்க ஏன் அப்படி சிரிச்சாங்கன்னு எனக்குத் தெரில்லைங்க. ஆனால், பின்னாளில் அவங்க சிரிச்ச சிரிப்புச் சரியா போச்சு.

மருத்துவர் ஆகிடுவோம்னு நம்பிக்கையோடு சைன்ஸ் ட்ரீம் போனேன். ஆனா பாடம் எதும் மண்டையிலே ஏறல்ல. அப்படி இப்படின்னு பல்கலைக்கழகத்தை முடிச்சுட்டு வேலைக்குத் தயாரானேன். வீட்டில் எல்லாம், போலீஸ் வேலைக்கு அப்ளைப் பண்ணு, டீச்சர் வேலைக்கு அப்ளைப் பண்ணுன்னு சொன்னாங்க. நானும் நம்பி அப்ளைப் பண்ணேன். பார்வை சரியில்லை, போதிய உடல் தகுதியும் இல்லைன்னு போலீஸ் வேலை என்னை நிராகரிச்சிருச்சு. சரி டீச்சராயிருவோம்னு, டீச்சர் வேலைக்கு அப்ளைப் பண்ணேன். பரீட்சைக்குக் கூப்டாங்க. நானும் போனேன் பரீட்சையையும் எழுதுனேன். ஒரு வாரம் சென்று ரிசல்ட் தெரியும்னு சொன்னாங்க. நாட்கள் கடந்தன…

“ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்”.. ஆமாங்க, தெய்வாதினமா அந்த பரீட்சையில்ல பாஸ் பண்ணிட்டேன். அப்புறம் என்ன? நேர்முகத் தேர்வுக்குக் கூப்டாங்க. பாதி கிணற்றைத் தாண்டிட்டோம், இன்னும் மீதிதானே தாண்டிருவோம்னு போனேன். போனா நான் தேவையான ஆவணங்கள்ல எடுத்துட்டுப் போல. அதுக்குப் பின்னடி ஒரு காரணம் இருக்கு. சொன்னா நீங்க சிரிப்பீங்க. அது எதுக்கு?.. அப்படி இப்படின்னு நேர்முகத் தேர்வுள்ல என்னை அனுமதிச்சிட்டாங்க. உள்ள ஆறு பேரு. ரெண்டு அதிகாரிங்க, மத்த மூனு பேரு என் கேஸ். குரூப் இண்டர்வ்யுல்ல எப்படியோ தேறிட்டங்க. ஆனா தனித்தனியா செஞ்ச இண்டர்வ்யூதான் என்னைச் செஞ்சிருச்சு. அப்படி ஒரு கேள்வியை அன்னிக்கு அந்த அதிகாரி என்கிட்ட கேட்டாங்க. அந்த கேள்விக்கு இப்ப வரைக்கும் எனக்குப் பதில் தெரில்ல. இப்போ நினைக்கிரீங்கன்னு எனக்குத் தெரியும். அந்த கேள்வி என்னென்னுதானே? ஹிம்ஹிம்..அதை நான் சொல்ல மாட்டேனே. ம்ம்ம் கடைசியில்ல டீச்சர் வேலையும் ஊத்திகிச்சு.

என்னடா நாம்ப நினைச்ச எந்த வேலையும் சரியா அமையில்லையேன்னு கொஞ்சம் கவலைப்பட்டேங்க. ஆனா என்னை விட என் வீட்ல உள்ளவங்கதான் அதிகமா வருத்தப்பட்டாங்க. ஏன்னா அதெல்லாம் அவுங்களோட கனவுகள்தானே. பின்ன எதுதான் என் கனவு?.

ஒரு காலக்கட்டம் வரை எனக்கு எதிர்காலத்துல்ல என்னவா ஆகணுங்கிற எண்ணமே இல்லாமதான் இருந்துச்சு. ஏளனங்கள்தான் எனக்குள் கனவுகளை..இல்லை ஜெயிக்கணுங்கிற வெறியை உண்டாக்குச்சு. நம்பனால என்ன முடியாதுங்கிறதை மத்தவங்க சொல்லகூடாது, அதை நாம்பதான் உறுதிப்படுத்திக்கணுங்கிறதை நான் ரொம்பவே நம்பினேன். எல்லோருக்கும் எல்லாமே வராது. ஆனா முயற்சி பண்ணா வராதுங்கிற வார்த்தையே வராது. நான் எதுல பேஸ்ட்டுன்னு புரிஞ்சிக்கவே எனக்கு ரொம்ப நாளாச்சு. அதுக்கு எதிர்திசை அழுத்தங்கள் காரணங்களாக இருந்துச்சு. நாம்ப பண்றது சரியா தப்பான்னு ஒரு குழப்பத்திலேயே வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருந்தேன்.

எழும்போது கைக்கொடுப்பவர்களை விட, விழும்போது கைக்கட்டிப் பார்ப்பவர்களும், கைக்கொட்டி சிரிப்பவர்களும்தான் அதிகம். நான் விழுறதுல்ல இவர்களுக்கு என்ன சந்தோஷம்னு நெனைச்சதுண்டு. ஏன்னா, அவர்களின் வழிக்கே போயிருக்க மாட்டேன். ஆனால், நாம்ப காரணமே இல்லாமல் ஒரு சிலருக்குக் கண் உறுத்தல்களாக இருப்பது உண்டு என்பதை ஒரு காலகட்டத்திற்குப் பிறகு உணர்ந்து கொண்டேன். அந்த உணர்வே பல முனைப்புகளை எனக்குள் திணித்தன. எதை நாம் அடையக் கூடாது என ஒரு சிலர் நினைக்கிறார்களோ, அதை நாம் அடைய வேண்டும் என்ற எண்ணம் வந்துச்சு. எனக்குள்ல இருந்த வெறியை வெற்றியா மாத்திக்கிட்டேன். வீழும் இடங்களில் எழுவதுதான் வெற்றின்னு ஏத்துக்கிட்டேன்.

இப்போ எனக்குள்ல பல கனவுகள் இருக்கின்றன. எல்லாதிலயும் ஜெயிப்பேங்கிற நம்பிக்கையும் இருக்கு. மத்தவங்களுக்காக நான் சுமந்த கனவுகளைவிட, நானே சுமந்த கனவுகளை அடையும் போதுதான் வாழ்க்கையோட உண்மையான சந்தோஷத்தை உணர்ந்தேன். சாதனை என்பது மேடை மீது பதக்கம் வாங்குவது மட்டுமல்ல. மனசுல தேங்கிருக்கும் கனவுகள் நனவாகுவதும் ஒரு வகை சாதனைதான். இன்னிக்கு நான் சுமந்துக்கிட்டு இருக்கறதும் நாளைய சாதனைகள்தான். வெறும் கனவுகள் அல்ல..உங்களுக்கு எப்படி?

எழுத்து
ஸ்ரீ குமரன் முனுசாமி

Comments

  1. Yen peyar venmathi yen yethirkaala aasai oru tamil asiriyar aavathuthaan yenakul irukum kanavai veli kaatiyatharku nandri tamilil yenaku migunta aarvam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

கைப்படாத ரோசா