அரசியல் ஆடுகளம்


தலைப்பைப் பார்த்தவுடன், அரசியல் நுணுக்கங்களுடன் ஏதோ எழுதுப்போகிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம். மன்னிச்சிடுங்க. நான் அரசியல் தெரியாத அப்பிராணி. அப்போ எதுக்கு இந்த டைட்டல்ன்னுதானே யோசிக்கிறீங்க? அப்போதானே படிப்பீங்க.

கொஞ்சம் காலமாவே, நம் நாட்டு அரசியல் எல்லோருடைய வாய்க்கும் அவல் பொரியாகியிருச்சு. யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் பேசலாங்கிற நிலைக்கு அரசியல் கீழிறக்கப்பட்டு விட்டது. அரசியல் அறிந்தவன், என்ன நடக்கப்போதுன்னு யூகிப்பில் வாழ்ந்து விடுவான். என்ன நடக்குதுன்னு தெரியாதவன் என்ன செய்வான். பேந்த பேந்த முழிப்பான். இல்லை அரசியல் அறிந்த மாதிரி நடிப்பான். இப்படி அரசியல் தெரியாத ஒருவனின் பார்வையில், நாட்டின் நடப்பு எப்படி இருக்கிறது என்பதை பகிரவே இந்த பதிவு!

அரசியல்! ஒரு பிரதமர், அவரைச் சுற்றி அமைச்சர்கள், ஏதோ நாட்டுக்கு நல்லது செய்வாங்க என்ற நம்பிக்கை. இதுதான் சாமன்ய மக்களின் நம்பிக்கை. நம்பிக்கை வெறும் நம்பிக்கையாதான் இத்தனை ஆண்டுகாலமும் இருந்திருக்கிறது. இப்போ ஊசலாடிக்கிட்டு இருக்கு. மாச மாசம் வீட்டுச் செலவு அதிகரிக்குது. ஆனா வருமானம் ஏறமாட்டுது. இதுக்கு ஒரு வழிய காணோம்?  யாரவது மகராசன் வரமாட்டானா, எங்களுக்கு நல்லது செய்யமாட்டானா என்று ஏங்கி ஏங்கியே எங்களுடையக் காலம் போயிருது!

இவரு வந்தா, அவருக்குப் பிடிக்கல, அவரு வந்த இவருக்குப் பிடிக்கல. பா, ஓரமா போய் விளையாடுங்கப்பான்னு சொல்லும் அளவுக்கு அரசியலின் நிலை தரமட்டமாகியிருச்சு. அவர்கள் சாணக்கியவாதிகள்தான், எந்த காயை எப்படி நகர்த்தணும்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஆனா இதுக்குப் பலியாடாவது நாங்களா? நான் அரசியல் பேசவில்லை, பேசப்போவதும் இல்லை. ஏனென்றால் எனக்கு அரசியல் தெரியாது.

அட எனம்மோ பண்ணுங்கப்பா, நாங்க இங்க பீஸாதான் இருக்குறோம். டேய்லி ரூட்டின் நல்லாவே போது. அதே நெரிசல், அதே நாசிலெமாக் பசியாறை, அதே வேலை, அதே போஸ். போரடிச்சா, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டோக் இருக்கு. எப்படியோ நீங்க மாற போறதும் இல்ல. எங்க வாழ்க்கையும் மாறிவிட போறது இல்ல. ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்ல. இனி யார் வந்தாலும், அடுத்த நாட்டு நிலவரம் மாதிரிதான் எங்களுக்குத் தோணப்போது. அப்படிப்பட்ட தாக்கத்தை இன்றைய அரசியல் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது.

ஆனால், இந்த அரசியல் ஓர் ஆடுகளம்தான். ஒருப்பக்கமாவே ஆடாதீங்க.
அப்பப்போ எங்களப்பத்தியும் கொஞ்சம் யோசிங்க. அடுத்த ஆட்டத்துக்குத் தேவைப்படுவோம்.

#நான்அரசியல்பேசவில்லை


Comments

  1. Panam irukkum manitharidam Gunam iruppathillai,Gunam irukkum manitharidam Panam iruppathillai�� ithuthan Nambe ��

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மழை நின்ற பின்பும் தூறல்

இறந்தாலும் காதல் இறக்காதம்மா!

கைப்படாத ரோசா