சைலைபுத்ரி (பாகம் 3)
அந்த அலறல் சத்தம் கேட்டு பயந்து போய் கண்களை இருக மூடிக் கொண்டேன். "என்னங்க என்னங்க" என்று யாரோ என்னை உளுக்கிய உணர்வு. கண்ணைத் திறந்து பார்த்தால்தான் தெரிகிறது "நான் கண்டது ஒரு கனவு" என்று. இப்படிதான் முடிப்பேன் என நினைத்தீர்கள். அதான் இல்லை. கதையை அப்படியெல்லாம் முடித்து விட மாட்டேன். ஆனால் நான் கண்ட காட்சி உண்மையில் கனவா என்ற சந்தேகம் எழுந்தது. இருண்டிருந்த இடம், திருவிழா கோலம் பூண்டது. இது என்ன மாயஜாலமாக உள்ளது. என்னைச் சுற்றி ஆயிரங்கணக்கானோர் சூழ்ந்திருந்தனர். பாகுபலி திரைப்படத்தில் பார்ப்பது போல் அனைவரும் ராஜ உடையுடன் தக தகவென் இருந்தனர். என்னுடன் இருந்த பெண்ணோ, தேவதைப் போல் காட்சி அளித்தாள். "என்ன நடக்குது இங்கே" என்று குழப்பத்தில் நான் இருந்தேன். அவர்களோ இன்முகத்தோடு சும்ம மினுமினுத்துக் கொண்டிருந்தனர். குமரிகள் ஒருபுறம் என்னை பார்த்து பார்த்து அவர்களுக்குள் என்னமோ முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். கிழவிகளா என்னைப் பார்த்து நாணத்தில், தரையில் கோலம் போட்டனர். எனக்கு பக்கம் பயமாகத்தான் இருந்தது. அந்த கூட்டத்தில் இருந்து பெரியவர் ஒருவர் என்ன நோக்கி நடந்து வந்தார். பார்ப்பதற்கு ராதாரவியைப் போல் இருந்தார். என் அருகே வந்து, "வாங்க மருமகனே, உங்களை சைலைப் புறம் வரவேற்கிறது" என்றார். "மாப்பிள்ளையா" என்ற விழித்தேன். என்னுடன் இருந்த அந்த பெண்ணப் பார்த்து "என்னம்மா, மாப்பிள்ளை திரு திருன்னு விழிக்கிறாரு, எதுவும் தெரியாது? இல்லை விருப்பம் இல்லையா?" என்றார். அந்த பெண்"அப்பா, அப்பட்டியெல்லாம் ஒன்னுமில்லை, எல்லாம் புதிதாக இருப்பதால் கொஞ்சம் பதறியிருப்பார். நான் அவருக்கு விளக்குகிறேன். அவகாசம் கொடுங்கள்" என்றாள். எனக்கோ பேச்சும் வரவில்லை, மூச்சும் விட முடியவில்லை. என்ன சுற்றி இருந்தவர்கள் எல்லோரும், என்னை முறைத்துப் பார்ப்பதுபோலவே இருந்தது. "என்னுடன் வாங்க" என்று அந்த பெண் என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். கிளிகளும், குயிகளும் பாடல் மீட்ட, அருவி ஓர் ஓரம் தாளம் போட, அப்படி அழகான காட்சி. இதுவரை பார்த்திறாத காட்சி. நான் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ என்னையேப் பார்த்திருந்தாள். "என்னங்க..என்ன இது?" என்றேன். அவள் கனவில் இருந்து மீண்டதுபோல் திடுக்கிட்டாள். "என்ன? ஒன்னும் இல்லையே" என்றாள். "ஒன்னும் இல்லையா, ஏதோ அவசரம்னு சொன்னீங்க. இங்கு வந்து பார்த்தால், கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க. என்ன நடக்குது? நீங்களெல்லாம் யார்? எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க??" என்றேன் கொஞ்சம் கடுப்பாகவே. "கோபப் படாதீங்க. பொறுமையாக கேளுங்க. இது எங்கள் மாயலோகம், சைலேந்திர தேசம். நான் இந்நாட்டு இளவரசி சைலைப்புத்ரி. உங்கள் பகல் எங்கள் இரவு, எங்கள் இரவு உங்கள் பகல். ஒருநாள் நானும், என் தோழிகளும் யாருக்கும் தெரியாமல் உலாச் சென்றோம். அப்படி போகும்போதுதான் உங்களை நான் பார்த்தேன். உங்கள் வாகனத்தில் நீங்கல் அசந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். இதுவரை எங்கள் தேசத்து ஆண்களையே பார்த்து வளர்ந்த எனக்கு உங்களைப் பார்த்தவுடன் ஓர் ஈர்ப்பு வந்தது. உங்களையே பார்த்து அப்படியே மெய்மறந்து போனேன். அந்த நொடி உங்களுடனே வாழ்ந்துவிட வேண்டும் என தோன்றியது. இதற்கு பெயர் என்று தெரியவில்லை. என் தோழிகள் இதை காதல் என்றார்கள். இது காதலா?" என்று என் கண்களைக் கூர்ந்துப் பார்த்தால். நானும் அவளையே பார்த்தேன். அவள் கண்கள் என்னமோ பேசின. இதுவரை நான் உணராத ஒன்று. புதிதாக தோன்றியது. என் உதடுகள் என்னமோ சொல்ல துடித்தன. அவள் அவள் கைகளால் என் உதடுகளுக்கு தாழிட்டாள்.."எதுவும் சொல்லாதீங்க. இந்த நொடி போதும். இப்படியே உயிர் நீத்துக் கொள்வேன்" என்றாள். அவளின் அந்த வார்த்தைகள் எனக்குள் எதோ ஒரு வேகத்தை ஊடுருவச் செய்தது. அவளை நான் அணைத்துக் கொண்டேன்...
[தொடரும்]
எழுத்து
ஸ்ரீ குமரன் முனுசாமி
Comments
Post a Comment