தீவாளி இருக்க இல்லையா?
முப்பது ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி என்ற பண்டிகையை நான் கொண்டாடி வருகிறேன்..முதல் 10 ஆண்டுகள் தீவாளி என்றுதான் செவி வழி கேட்டு வந்தேன். பிறகு எழுத்து வடிவத்தில் மட்டுமே இருந்த தீபாவளி என்று சொல் புலக்கத்திற்கு வந்தது. நானும் பின்பற்றினேன். சிறு வயதில் நான் பார்த்த தீவாளியில் பீரு, ஓரஞ் ஜூஸூ, ஆட்டுக்கறி, பட்டாசு, புது டிரேஸு, புது சாயம், பலகாரம், தீவாளி கார்டு, ஜோடிக்கிற பூத்தாளு இதெல்லாம் கலந்த ஒரு வாசனை இருக்கும். போக போக அந்த வாசம் கொறஞ்சு வெறும் மாஸ்க் செனிடாய்சர் வாசம்தாம் இப்போ இருக்கு. இப்படி ஒரு முப்பது வருஷத்திலேயே தீவாளில எவ்ளோ மாற்றத்தை பார்த்துட்டோம்.
இத்தனைக்கு மத்தியிலே, முடிந்த வரை தீவாளியை சந்தோஷமா கொண்டாடாலாம்னு பார்த்தா, தீவாளி அதுவுமா மண்டைக்கு ஏத்துற மாதிரி ஒரு மெசெஜ். அதை தொடர்ந்து இன்னொரு மெசெஜ். எனக்குப் புரிலங்க. அது ஏன் இந்துவா இருக்குற தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைக்களுக்கு மட்டும் அவ்ளோ எதிர்ப்பு. தீவாளி தமிழர் பண்டிகையே இல்லை. அப்படி கொண்டாடுற தமிழர்கள், தமிழர்களே கெடையாது. அவுங்களுக்கு யோசிக்கிற ஆற்றலே கெடையதுங்குற மாதிரியான அர்த்தத்துல மெசெஜ். அப்போ, கிறிஸ்துமஸ், ஹரி ராயா தமிழர் பண்டிகையா? அத கொண்டாடுற தமிழ் கிறிஸ்டியன்ஸையும். முஸ்லீமையும் என்ன சொல்லுவீங்க. அவங்களும் தமிழர்கள்தானே. அங்க போன அதிலி பிதிலிதான்.
அது ஏன்னே தெரிலைங்க, பொங்கல் கொண்டாடினாலும் சரி, தமிழ் வருஷ பொறப்ப கொண்டாடினாலும் சரி, இப்ப தீவாளிய கொண்டாடினாலும் சரி, புது புது வியக்கானத்த கொண்டுட்டு வராங்க. கேட்டா அது வட நாட்டுப் பண்டிகையாம். இருந்துட்டு போது. அதுல என்ன தப்புங்கிறேன். இப்போ ரீஸண்டா "ஹெலோவீன்" ங்குற வெள்ளங்காரன் கொண்டாடுற பேய் விழாவ நம்ம நாட்டுல இன மதமெல்லாம் பாக்காம கொண்டாடுறங்க. இதுல பிள்ளைங்களுக்கு வேற சொல்லிக் கொடுக்குறாங்க. அத கேக்க எந்த புரட்சியாளர்களும் கிளம்பி வரல. நல்லதே ஜெயிக்குங்குற அர்த்துத்துல கொண்டாடுற தீவாளிய கொற சொல்ல மட்டும் வந்துட்டாங்க.
தீவாளிக்கு ஆயிரம் காரணங்களும், கதைகளும் சொல்றாங்க. ஆனா பொதுவா எல்லோரும் நெனைக்குறது என்ன, இருள் விலகி ஒளி வீசுற நாள். அப்படிதானே. நல்லாதானே இருக்கு. என்னை கேட்டா நமக்கும் நம்மல சுத்தி இருக்கறவங்களுக்கும் சந்தோஷத்தக் கொடுக்குற எந்த காரியமா இருந்தாலும் தப்பே இல்ல. மத்தவங்களோட நம்பிக்கைய மதிக்கம வார்த்தைகளால் அவமதிக்கிற சிலரின் செயலை விட இந்த பண்டிகைகளைக் கொண்டாடுவது ஒன்னும் பெரிய குத்தம் கெடையாது.
தீவாளிய பத்தி சங்க இலக்கியங்களில் சொல்லலன்னு சொல்லுறாங்க. பின்ன தமிழர் திருநாள், பத்தி சொல்லிருக்கா. ஏங்க, அவரவர் வசதிக்கு ஏத்த மாதிரி பேசுறீங்க. எல்லா பண்டிகைகளும், வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு மாதிரி கொண்டாடப்பட்டிருக்கு. அப்போ இருந்த பல பண்டிகைகள் இப்போ இல்லாம போயிருக்கு. இப்போ கொண்டாடுற பல பண்டிகைகள் அப்போ இல்லாம இருந்திருக்கு. பண்டிகைகள் காலத்துக்கு காலம் மட்டுமல்ல, இடத்துக்கு இடமும் வேறமாதிரிதான் இருக்கு. அவுங்க அவுங்க வசதிக்கு ஏத்தமாதிரி விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாடும் போது, இதில் எப்படி சரி தப்புன்னு கண்டுபுடிக்கிறீங்க.
சங்க இலக்கியங்களிலும், இடைக்கால இலக்கியங்களிலும் சொல்லப்படுற குறிப்புகள்தான் அந்த காலத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை முறையையும் சொல்லுதுன்னு எப்படி தீர்மானிக்கிறீங்க?. இந்த இரு கால இலக்கியங்களைக் கொண்டு நமது கலாச்சாரத்தை எப்படி உறுதிப்படுத்திறீங்க. எல்லாமே காலத்துக்குக் காலம் மாறுதுங்க போஸ். தமிழர் என்ற பெயர் எப்போது நமக்கு அடையாளப்படுத்தப்பட்டது. நமது கலாச்சாரம் பண்பாடு என்பதை தமிழரின் எந்த கால வாழ்க்கை முறையோடு ஒப்பிடுகிறீர்கள். சங்க இலக்கியக் காலத்திற்கு முன் இருந்த தமிழரின் வாழ்க்கைமுறையை இப்போது பின்பற்ற முடியுமா?, இல்ல சங்க இலக்கிய காலத்தில் இருந்த தமிழரைப் போல்தான் நாம் உடை உடுத்தி திரிய முடியுமா.
சேலைக் கட்டலன்னா குத்தம், வேட்டிக் கட்டுல்ன்னு குத்தம். இதுதான் நம் பாரம்பரியம் என்ற சொல்லுற உடைகளையே நாம நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிறோம், பின்ன எதுக்கு இந்த வீண் பேச்சு.
வேரி சிம்பல், உங்களுக்கு இஷ்டம் இருந்தா கொண்டாடுங்க இல்லைய கம்னு கெடங்க. அது விட்டுட்டு, தீவாளி கொண்டாடுறவங்கள தமிழர்களே கிடையாதுன்னா கெட்ட கோவம் வரும். நீங்க யாரு யார் தமிழர் என்பதை தீர்மானிக்க. அகத்தியரா இல்லை தொல்க்காப்பியரா. அவுங்க கூட இப்படி பொலம்பிருக்க மாட்டாங்க. மொழியைக் காப்பதற்கும், கலாச்சாரத்தைப் பேணுவதற்கும் சிறந்த ஊக்குவிப்பு அல்லது விழிப்புணர்வு வழிகளை ஆராயுங்கள். அதைவிடுத்து, சந்தோஷத்துக்குக் கொண்டாடுற பண்டிகைகளைக் கொற சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. இன்னிக்கு செத்தா நாளைக்குப் பாலு. அவ்ளோதன் இந்த வாழ்க்கை. இதில் என்னத்துக்கு இவ்ளோ குழப்படிகள். சந்தோஷமா இருங்க. மத்தவங்கள சந்தோஷப்படுத்துங்க. அவ்ளோதான்.
பண்டிகைகளை சந்தோஷத்துக்காகத்தான் கொண்டாடுறோம். குடும்பத்தோட ஜாலியா ஹேப்பியா இருக்கத்தான் கொண்டாடுறோம். சொ நோ வொரி பீ ஹேப்பி!!!!
ஜாலியுடன்..
ஸ்ரீ குமரன் முனுசாமி
Comments
Post a Comment